நெல்லையின் சிறப்புகள் கூறும் சிறப்பான விடுகதைகள்
நெல்லையின் சிறப்புகளை நயம்பட கூறும் சுவாரசியமான விடுகதைகள் நேரம் 👇👇 (1) நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலைச் சிறப்பைத் திறம்பட எடுத்துக்காட்டும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில். இக்கோவில் அமைந்திருக்கும் கிராமத்தின் முன்னாள் பெயர் திருவேங்கடபுரம் ஆகும். அது என்ன கோவில்?______. விடை: கிருஷ்ணாபுரம் வேங்கட பெருமாள் கோவில். (2) நின்றசீர் நெடுமாறனால் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் உடைய பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இது. இக்கோவில் திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். அது என்ன கோவில்?_______. விடை: நெல்லையப்பர் கோயில். (3) திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற சைவ உணவு வகை எது?______. விடை: சொதி குழம்பு. (4) நெல்லையின் பெயரைக் கேட்டாலே அனைவரின் நினைவிற்கும் வரும் இனிப்பு வகை என்ன?_______. விடை: அல்வா. (5) பாபநாசம் அருவி என அழைக்கப்படும் இந்த அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியில் தான் அகத்திய முனிவர் சிவனின் திருக்கல்யாண காட்சியைக் கண்டார். அந்த அருவியின் மறு பெயர் என்ன?_______. விடை: அகத்தியர் அருவி. (6) பலப்பல கல்வி நிறுவனங்கள் உடையது பாளையங்கோட்டை. தி...