அனைவரையும் கவரும் விடுகதை நேரம் விடைகளுடன்

 அனைவரையும் கவிர்ந்திடும் அற்புதமான விடுகதைகளை அருமையான விடைகளுடன் வாசித்து மகிழுங்கள்👇👇


(1) அறிவையும் அழகையும் விளக்க அவளை பயன்படுத்துவர். அவள் யார்?_____.

விடை: நிலவு ( மதி)


(2) கறுப்பு நிறம் கொண்டவன். கூவி அழைத்தால் தன் உறவுக்காரர்களை அழைத்து வந்திடுவான். அவன் யார்?_____.

விடை: காகம்.


(3) என் பெயரைச் சொல்லி அழைத்தால் கூட நான் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவேன். நான் யார்?_____.

விடை: அமைதி.


(4) என்னை யாரிடம் பகிர்ந்தாலும் நான் நிச்சயம் இறந்து விடுவேன். நான் யார்?______.

விடை: இரகசியம்.


(5) என்னிடம் இருக்கும் நாடுகளில் மனிதர்கள் இருக்கமாட்டர். மேலும், என்னிடம் இருக்கும் கடலிலும் பெருங்கடலிலும் நீர் இருக்காது. நான் யார்?_____.

விடை: வரைபடம் (மேப்).


(6) மனம் இல்லாதவள் அழுதுகொண்டே ஒளி தருவாள். தன்னையே அர்ப்பணித்திடுவாள்; ஆனால், தியாகியும் அல்ல. அவள் யார்?______.

விடை: மெழுகுவர்த்தி.


(7) பல லட்சம் அடுக்குகளை கொண்டிருந்தாலும் மாளிகையின் அளவோ மிகவும் சிறிதாக தான் இருக்கும். அது என்ன?_____.

விடை: தேன்கூடு.


(8) சமையலுக்கு உதவிடும் அவனை அளவறிந்து பயன்படுத்தினால் அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். அவன் யார்?_____.

விடை: உப்பு.


(9) நான்கு கால்கள் உடையவன்; நாற்காலி அல்ல. நன்றிக்கு உவமையாய் சொல்லப்படுபவன். அவன் யார்?_____.

விடை: நாய்.


(10) கண்ணுக்குத் தெரியாத மாய தேவதை தினமும் தாவிக்கொண்டே இருப்பாள் பலப்பல இடங்களை நோக்கி. அவள் யார்?_____.

விடை: மனித மனம்.


மேலும் பல விடுகதைகளுக்கு, "விடுகதை நேரம்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள்


உங்கள் மனதைக் கவர்ந்த சிறந்த விடுகதையை கமண்ட்டாக பதிவிடுங்கள். மேலும் எங்களது விடுகதைகளை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்...😊

Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Let everyone celebrate this special day with our patriotic poem

வாசிக்க வேண்டிய காமராசரின் வாழ்க்கை வரலாறு

Followers of Our Blog