மூளைக்கு வேலை தரும் விடுகதைகள் விடைகளுடன்

எளிய விடுகதைகள் விடைகளுடன்


(1) ஆடச் சொல்லி சட்டை போடுவான். ஆடும் முன்னே அவிழ்த்து விடுவான். அவன் யார்? ________.
விடை: பம்பரம். 


(2) கண்கள் இல்லாதவன் கண்ணீர் வடிக்கிறான்.அவன் யார்? ________.
விடை: மெழுகுவர்த்தி. 


(3) என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். நான் யார்? _________.
விடை: கண்ணாடி. 


(4) விதை இல்லாமல் முளைக்கும். வேர் இல்லாமல் காய்க்கும். அது என்ன? __________.
விடை: உப்பு. 


(5) கால் இல்லாமல் தாவுவான். வாய் இல்லாமல் கத்துவான். அவன் யார்? ________.
விடை: கடல்.


(6) உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்கிறார். அவன் யார்? _______.
விடை: தராசு. 


(7) ஓட்டைக் காதுக்காரி, வீட்டுக்குச் காவல்காரி. அவள் யார்?________.
விடை: பூட்டு. 


(8) கடல் நீரால் வளர்வான். மழை நீரால் மடிவான். அவன் யார்? _______.
விடை: உப்பு. 


(9) லட்சம் முறை மூடித்திறப்பினும் ஓசை வராத கதவுகள். அது என்ன?_________.
விடை: கண் இமைகள். 


(10) மழைக்காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? _______.
விடை: காளான். 


(11) மாடிகளற்ற வீட்டில்  எல்லாப் பொருட்களுக்கும் பச்சை நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்? _________.
விடை: மாடி இல்லாததால் படிகள் இருக்காது. 


(12) எவராலும் விற்க முடியாத கல். கண்ணுக்குத் தெரியாத கல். அது என்ன?_______.
விடை: விக்கல்.


மேலும், விடுகதைகளை விடைகளோடு வாசிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். விடுகதைகள் பற்றி கமண்ட் செய்வதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog