அனைவரையும் கவர்ந்திடும் அருமையான விடுகதைகள்

அனைவரையும் கவர்ந்திடும் விடுகதைகள் விடைகளுடன்👇👇



(1) குருடர்க்கு வழிகாட்டிடும் கண் இல்லாதவன். அவன் யார்?_____.
விடை: கைத்தடி.


(2) கம்பி வழியே வீட்டுக்குள் வந்திடுவான். ஆனால், காண முடியாது. அவன் யார்?______.
விடை: மின்சாரம்.


(3) இணை பிரிந்திடமாட்டோம், நண்பர்கள் அல்ல. ஒன்றுசேர மாட்டோம், பகைவர்கள் அல்ல. நாங்கள் யார்?_____.
விடை: இரயில் தண்டவாளம்.


(4) ஒரே ஒரு காது உடைய ஒல்லியான மனிதன். அவன் யார்?______.
விடை: ஊசி.


(5) கண்ணை மறைப்பவன் கண்ணுக்குத் தெரியமாட்டான். அவன் யார்?_____.
விடை: கண் இமைகள்.


(6) தண்ணீரிலே கிடப்பேன். எனினும், தலை குளிக்க மாட்டேன். நான் யார்?_____.
விடை: தாமரை.


(7) சூடு பட்டு சிவந்திருப்பான். வீடு கட்ட உதவிடுவான். அவன் யார்?_____.
விடை: செங்கல்.


(8) ஒளியிலே உனக்குத் துணை வருவேன். ஆனால், இருளைக் கண்டால் ஓடி ஒழிந்திடுவேன். நான் யார்?_____.
விடை: நிழல்.


(9) நீண்ட உடம்பு உடையவன் நெடுந்தொலைவு பயணம் செய்திடுவான். அவன் யார்?_____.
விடை: இரயில்.


(10) ஓடத் தெரியாதவனுக்கு ஆடத் தெரியும். அவன் யார்?_____.
விடை: பம்பரம்.


மேலும் இதுபோன்ற விடுகதைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.

விடுகதைகள் தங்களது மனங்களை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள். விடுகதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களையும் கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள்...😄

Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog