தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாத் தலம் பற்றிய விடுகதைகள்

தமிழகத்தில் உள்ள கட்டிடக்கலைச் சிறப்பு மற்றும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி விளக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇

Tamil riddles that gives you more knowledge


1) தமிழ்நாட்டில்  இடம்பெற்றுள்ள வித்தியாசமான விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று.  கூத்தனூரில் உள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப் பெற்ற  விநாயகர் கோவில் இது. உலகிலேயே மனித முகம் கொண்ட விநாயகர் கோவில் இது மட்டும் தான். இக்கோவிலின் பெயர் என்ன? ______.

விடை: ஆதி விநாயகர் கோவில்.


(2) தமிழ்நாட்டில் உள்ள பண்டைக் கால சோழர்களின் நேர்த்தியான கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் சிறப்பு வாய்ந்த கோவில். பல சிறப்புகள் மற்றும் மர்மங்களுக்கு பெயர் பெற்ற இக்கோவிலை அதிகார பதவியில் இருப்போர் நெருங்க அஞ்சுவர். அது என்ன கோவில்?_______.

விடை: தஞ்சை பெரிய கோவில்.


(3) விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில் இது. இரண்டைத் தலையுடைய கற்சிற்பம் (காளை மற்றும் யானையின் தலை கொண்ட கற்சிற்பம்) இக்கோவிலின் தனித்துவமாக உள்ளது. இக்கோவில் வேலூரில் அமைந்துள்ளது. அது என்ன?______.

விடை: ஜலகண்டேசுவரர் கோவில்.


(4) சோழ மன்னர்களது தலைசிறந்த கட்டிடக்கலையை விளக்கும் அரியலூரில் இடம்பெற்றுள்ளது இக்கோவில். மேலும், இக்கோவில் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் ஒன்றாகவும் உள்ளது. அது என்ன?_______.

விடை: கங்கை கொண்ட சோழபுரம்.


(5) நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலையை சிறப்பாக எடுத்துக்காட்டும் பழமையான கோவில். இது மதுரைக்கு பெருமை சேர்க்கும் பிரம்மாண்டமான கோவிலாகும். அது என்ன?________.

விடை: மீனாட்சி அம்மன் கோவில்.


(6) நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் இக்கோவிலும் ஒன்று. அழகிய தூண்களுடன் கூடிய சிறப்பான கட்டிடக்கலை உடைய இக்கோவில், காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய கோவிலாகும். அது என்ன?_______.

விடை: அத்திவரதர் கோவில்.


(7) மிகவும் பழமை வாய்ந்த குடைவரைக் கோவில்களுள் இக்கோவில் ஒன்றாகும். சிவகங்கையில் அமைந்துள்ள இக்கோவிலானது பாண்டியர்களின் தனித்துவமான கட்டிடக்கலையை இன்றளவும் எடுத்துக்காட்டுகிறது. அது என்ன?________.

விடை: பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்.


(8)  சிற்பிகளின் கனவு என சிறப்பிக்கப்படும் கோவில் இது. அழியாத சோழர் பெருங்கோவில்கள் பட்டியலில் இக்கோவிலும் ஒன்று. தேரின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட மண்டபம் இக்கோவிலில் மிகவும் சிறப்பாகும். அது என்ன கோவில்?_______.

விடை: ஐராவதேசுவரர் கோவில்.


(9) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பாண்டிய நாட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். இசை தரும் தூண்கள் கொண்ட மணிமண்டபம் இக்கோவிலில் உள்ள தனித்துவ சிறப்பாகும். அது என்ன?_______.

விடை: நெல்லையப்பர் கோவில்.


(10) பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாக நம்பம்படும் கோவில் இது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற இக்கோவில் திரு ஊரகம் என அழைக்கப்படும் சிறப்பு உடையது ஆகும். அது என்ன?_______.

விடை: உலகளந்த பெருமாள் கோயில்.


எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை அணுகவும். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிரவும் மற்றும் தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிடவும்...😄

Comments

  1. மிகவும் சிறப்பு வாய்ந்த தகவல்கள்🤚🤚

    ReplyDelete
  2. தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விடுகதைகள் 👍

    ReplyDelete
  3. அடடா!! என்ன அற்புதமான விடுகதைகள்!!

    ReplyDelete

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog