மூளைக்கு வேலை தரும் நீங்கள் விரும்பும் விடுகதைகள்
விடுகதைகளை விறுவிறுப்பான பதில்களுடன் வாசித்து மகிழுங்கள்👇👇
(1) கண் இமைக்காமல் பார்ப்பேன். கண் மூடாமல் தூங்குவேன். நான் யார்?______.
விடை: மீன்.
(2) இரண்டு எழுத்து கொண்டவன். போருக்கு செல்லாமலே, கவசத்தை அணிந்திருப்பான். அவன் யார்?_____.
விடை: ஆமை.
(3) கையில் பிடிக்க முடியாதவன். கண்ணுக்குத் தெரியாதவன். தொலைத்தால் மீண்டும் பெற இயலாதவன். அவன் யார்?_____.
விடை: காலம்.
(4) அனைவரும் விரும்பி தேடும் மதி நான். நான் யார்?_____.
விடை: நிம்மதி.
(5) விலைமதிப்பற்ற இந்த நகையை அணிந்தால், உடலுக்கு நல்லது. அது என்ன?_____.
விடை: புன்னகை.
(6) வார்த்தைகளை கோர்த்து உருவாக்கும் விதை. மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தவல்ல விதை. அது என்ன?_____.
விடை: கவிதை.
(7) உள்ளத்தை விளக்கும் வேறு சொல். "உள்ளே" என்றும் பொருள் தருவேன். நான் யார்?_____.
விடை: அகம்.
(8) உங்கள் அகத்தை நல்வழிப்படுத்தும் தகுதி கொண்ட உயிரற்றவன். அவன் யார்?_____.
விடை: புத்தகம்.
(9) இரவில் உறங்கும் பழக்கம் அற்றவன். இரவில், சிறந்த பார்வை திறன் கொண்டவன். இவனது ஒலியை அலறல் என்பர். இவன் யார்?_____.
விடை: ஆந்தை.
(10) பல இதயங்கள் உண்டு. ஆனால், ஒரு இதயத்திலும் துடிப்பு இல்லை. அது என்ன?_____.
விடை: சீட்டுக்கட்டு.
எங்கள் விடுகதைகள் தங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, விடுகதை நேரம் என்ற லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
This comment has been removed by the author.
ReplyDeleteSuper 👌 ma
ReplyDeleteVery funny and nice riddles.
ReplyDelete👌👌