உன்னதமான வாழ்க்கை பெற பின்பற்ற வேண்டியவை
உன்னதமான வாழ்வுக்கு வழிகாட்டும் மிகச்சிறந்த சிந்தனை துளிகளை வாசித்து மகிழுங்கள்👇👇 (1) "உங்களை எவரும் மதிக்கவில்லை என நீங்கள் கவலைப்படுவதற்கு முன், நீங்கள் அனைவருக்கும் எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள். காரணம் புரியும்." (2) "மரியாதையானது, மனதில் இருந்து வர வேண்டும். நிர்பந்தத்தின் பேரில் செலுத்தப்படும் மரியாதை, என்றாவது ஒருநாள் அவமானத்தை நிச்சயம் தரும்." (3) "உங்களது கடமையை நிறைவேற்றாமல், அடுத்தவர் மீது குறை கூறாதீர்கள். ஏனெனில், கடமை உங்களுடையதே. எனவே, உங்கள் அலட்சியத்தை மறைக்க அடுத்தவர் மீது பழி போடாதீர்கள்." (4) "மனதில் மார்க்கம் இருப்பவரால், அரிய காரியத்தையும் கைவசப்படுத்த முடியும். ஆனால், மனதில் மார்க்கம் இல்லாதவர், கடமைகளில் இருந்து தப்பிக்கவே எப்போதும் காரணம் கண்டுபிடிப்பர்." (5) "உங்கள் தவறுகளை நீங்கள் உணரவில்லை என்றால், அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் தகுதி உங்களுக்கு கிடையாது." (6) "உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும் இடத்தில் பேசுங்கள். மதிப்பு கொடுக்கப்படாத இடத்தில், மௌனம் சாதிப்பதே சாலச் ...