அகம்பாவத்தின் அழிவை விளக்கும் அற்புதமான கதை

 மனம் நெகிழ வைக்கும் அகம்பாவத்தின் அழிவை விளக்கும் சிறப்பான சிறுகதை👇👇


கவிதா படித்து வந்த பள்ளியில் கலைத்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் வகுப்புவாரியாக கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் கலைவிழாவில் வழங்கப்படும்.


சென்ற வருடங்களைப் போன்றே, நடப்பாண்டிற்கான கலைவிழா அறிவிப்புகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டது. போட்டிகளில் பங்கேற்க பள்ளிக் குழந்தைகள் அனைவரும் ஆவலோடு தயாராகி வந்தனர். போட்டியில் பங்குபெற பெயரை ஆவலோடு பதிவு செய்தாள் கவிதா. எனினும், அவள் பயிற்சி மேற்கொள்ள தயாராக இல்லை. 


கவிதா கலைநயத்தோடு நடனம் ஆடுவதில் கைத்தேர்ந்தவள். அவளுடைய இடைவிடாத பயிற்சியாலும் விடாமுயற்சியாலும்  கடந்த மூன்று வருடங்களாக நாட்டியப்போட்டியில் முதற்பரிசை பெற்று வந்தாள். மேலும், அவளை ஊக்குவிக்க எண்ணிய பள்ளி நிர்வாகம், அவளுக்கு"சிறந்த நடனக் கலைஞர்" என்ற விருதை கடந்தாண்டு வழங்கி கௌரவித்தது.


ஆனால், கவிதாவின் மனதில் ஊக்கம் பிறப்பதற்கு பதிலாக மமதையும் அகம்பாவமும் அதிகரித்து விட்டது என்பதே நிதர்சன உண்மை. கவிதா போட்டிக்கு பயிற்சி செய்யாததற்கு இதுவே காரணமாகும்.


பயிற்சியின்றி போட்டியில் கலந்து கொண்ட அவளுக்கு பரிசாகக் கிடைத்ததோ படுதோல்வியே. முதல் பரிசை பெற்ற மாணவி பலவாரங்கள் முயற்சியும் பயிற்சியும் செய்து  வெற்றி பெற்றாள் என அறிந்து கொண்டாள் கவிதா.  இதை அறிந்த பின், "அகம்பாவம் என்றும் அழிவையே பரிசளித்திடும்" என புரிந்து கொண்டாள் அவள். வரும் ஆண்டுகளில் பயிற்சியும் முயற்சியும் செய்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்தாள்.


நீதி: ஊக்கம் ஒருவருக்கு என்றென்றும் அவசியம். ஆனால், அதுவே அகம்பாவமாய் மாறினால் ஊக்கமும் ஆபத்திலே முடியும். 


(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)


மேலும் கதைகளுக்கு, இங்கே தொடவும்...


எங்கள் கதைகள் தங்கள் சிந்தைக்கு சிறப்பு சேர்த்திருக்கும் என நம்புகிறோம். கதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்வதோடு, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊


Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog