அனைவரும் வாசிக்க வேண்டிய குறுங்கவிதை
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDeu0dcAGFSNC4m0bbGzqppxumRZwIRwHFLEhHdBGxvV4AdbCCIrNQllIXRin8BjfxMA6uSimSGX4JtwqSt6PaF1F1LpWhH3enITL2FKhQUUfYFO4hVSFMtUtEXsICkVGSpI9LJa4tAGrF/w320-h226/corona-awareness-poem.jpg)
கொரோனா என்ற கொடிய நோயின் தீவிரத்தை விளக்கும் சிறுகவிதை குழந்தைகளின் குமுறல் காற்று மாசு அடைந்தது பாப்பா, முகத்தை முகக்கவசத்தால் மூடிடு பாப்பா. வீட்டில் ஒலிந்துகொள் பாப்பா, அல்லது கொரோனா பிடித்திடும் பாப்பா. பாடங்கள் கற்க முடியாது பாப்பா, பள்ளிகள் இப்போது திறக்காது பாப்பா. இயற்கையை அழித்தோம் பாப்பா, இன்று நாமும் அழிகிறோம் பாப்பா. இடைவெளி விட்டு நின்றிடு பாப்பா, அல்லது ஆபத்து வந்துசேரும் பாப்பா. நோய் பயம் வளர்ந்தது பாப்பா, குழந்தை பருவம் சோகத்தில் மூழ்கியது பாப்பா. (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.