அனைவரையும் சிந்திக்க வைக்கும் கதை நேரம்


மாற்றம் நம் கையில்...

அன்று ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை எழிலரசிக்கு. வீட்டுப்பாடம் முடித்துவிட்ட எழில், பொழுதைக் கழிப்பதற்காக செய்வதறியாமல் தெருவைப் பார்த்தபடி வீட்டு வாயிலருகில் அமர்ந்திருந்தாள்.

 எழிலின் வீட்டிற்கு எதிரில் மளிகை கடை இருந்ததால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க வேண்டி இருந்தது. கடைக்கு மிட்டாய் வாங்க வரும் குட்டிக் குழந்தைகள் செய்யும் சுட்டிக் குறும்புகளை பார்த்து ரசித்த வண்ணம் அவள் நேரம் கழித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, அந்த கடைக்கு பேசியபடியே இரு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். சாலையில் ஆங்காங்கே குப்பையாய் கிடப்பதை பற்றி கவலையை தெரிவித்துக் கொண்டிருந்தனர். சாலையை சுத்தம் செய்ய அரசு பொறுப்பேற்காமல் அலட்சியம் காட்டுவதாய் குற்றம் சாட்டியபடி நடந்தவர்கள் கடையை அடைந்தனர். சமூகத்தை மாற்றத் துடிக்கும் அவர்களுடைய பேச்சு எழிலுக்கு மகிழ்வைத் தந்தது. அவர்கள் மீது எழிலுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.

கடையில் பொருட்கள் வாங்கியவர்கள், தங்கள் தாகம் தணிப்பதற்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை பருகிவிட்டு காலியான பாட்டிலை கசக்கி கீழே வீசியபடி மீண்டும் பேசியவாறே நடக்கத் தொடர்ந்தனர். இந்த நிகழ்வு எழிலின் மனதில் அவர்கள் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாய் உடைத்தது.


இந்த நிகழ்வின் மூலம், "மாற்றத்தை பற்றி பேசி பலனில்லை, மாற்றம் வேண்டுமானால் அதை விரும்புபவர் தான் முன்வந்து ஏற்படுத்த வேண்டும்" என புரிந்து கொண்டாள் எழில். மாற்றம் ஏற்பட தானே காரணமாய் மாற விரும்பினாள். அவள் விரும்பும் தூய்மையான சுற்றுப்புறத்தை அவளே முன்னோடியாய் இருந்து உருவாக்கினாள்.

அன்று முதல், சாலை வழிச்செல்வோர் அவள் வீட்டினருகே வீசும் குப்பைகளை அவளே முன்வந்து அகற்றினாள். அவளுடைய குடும்பத்தினர் அவள் முயற்சியில் அவளுக்கு உறுதுணையாய் இருந்தனர்.

அவள் குடும்பத்தினரின் முயற்சியை வரவேற்று அவள் தெருவில் வசிப்போரும் தெருவை சுத்தம் செய்வதில் தங்களால் முடிந்த உதவிகளை முன்வந்து செய்தனர். அனைவரும் ஒன்றிணைந்து தெரு முழுவதும் ஆங்காங்கே குப்பை தொட்டிகளும் வாங்கி வைத்தனர்.

அவர்களுடைய சிறிய முயற்சி அந்த தெருவழியே செல்லும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அவர்களுடைய முயற்சியால் தூய்மையான சுற்றுப்புறமாக அவர்களுடைய தெரு உருவாகியது.

(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)

நீதி: ஒற்றுமையும் முயற்சியும் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்!!

கதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள். கதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்... 😊சிறுகதையை சிறிதுநேரம் செலவிட்டு முழுமையாய் வாசித்தமைக்கு நன்றி🙏🙏.

மேலும் இது போன்ற நீதிக்கதைகளுக்கு, இங்கே தொடவும்...👈👈


Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog