மனம் கவரும் தமிழில் சிந்திக்க வைக்கும் கதை நேரம்

மனம் கவரும் எளிய தமிழில் சிந்திக்க வைக்கும் சிறுகதை👇👇

சிந்திக்க வைக்கும் சிறுகதை


ஐ.டி.துறையில் ஆர்வமாகப் பணியாற்றி வந்தாள் நவீனா. ஆறுமாதங்களாக சுறுசுறுப்பாக பணியாற்றி வந்த அவளை கொரோனா கால ஊரடங்கு வீட்டிற்குள் முடக்கிவிட்டது. மனதை திடமாய் வைத்துக் கொண்டு, வேலைக்கு திரும்பும் நாளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

ஊரடங்கு என்று தளர்த்தப்படும்? என்ற ஏக்கத்துடன் செய்தித்தாளை புரட்டிய அவளின் கண்களில் பட்டதோ இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு தான். சோர்வான மனதோடு செய்தியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அலைபேசியின் அலறல் சத்தம் கேட்டு அதைக்  கையில் எடுத்து பணிவோடு பேசலானாள்.


எதிர்முனையில் பேசியவர், ஐம்பது சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வேண்டும் என கம்பெனியில் முடிவு செய்ததால் வேலையில் இருந்து நவீனாவை நீக்குவதாக தெரிவித்தார். இது அவளுடைய மனதை மேலும் நோகச் செய்தது.


பண தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகளை எண்ணி மனம் நொந்தபடி சோகமாய் அமர்ந்திருந்தாள் நவீனா. அவள் மனதை திசைதிருப்ப எண்ணி, அவளைக் கடைக்கு அனுப்பினாள் அவளுடைய தாய். கடைக்குச் செல்லும் வழியில், முகக்கவசத்தின் அவசியத்தை விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த தன்னார்வலர்கள் மீது கவனம் செலுத்திய அவளுக்கு அற்புதமான யோசனை தோன்றியது.


கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டை நோக்கி விரைந்தாள். முகக்கவசம் தைக்கும் பணியில் தான் ஈடுபட போவதாய் அறிவித்தாள். பள்ளியில் பயின்ற காலத்தில், அவள் ஆர்வமாய் படித்த கலை கைத்தொழில் தொடங்க அவளுக்கு உறுதுணையாக அமைந்தது. பணதேவைகளைத் பூர்த்தி செய்ய தான் படித்த தையற்கலை உதவியதை எண்ணி பெருமிதம் அடைந்தாள் அவள்.

(கதையை எழுதியவர் சுபஸ்ரீ)


மேலும் இதுபோன்ற கதைகளுக்கு, கீழே இருக்கும் லேபிலை பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு இக்கதை "கைத்தொழில் கற்றால் கவலையற்ற வாழ்வு கைவசம்" என உணர்த்தி இருக்கும் என நம்புகிறோம். கதையை பற்றிய கருத்துக்களை கமெண்ட் செய்வதோடு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊

Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog