சிந்தனை துளிகளோடு அன்றாட தினத்தை சிறப்பாக்குங்கள்
எங்களது சிந்தனை துளிகளோடு உங்கள் தினத்தை சிறப்பாக மாற்றுங்கள்👇👇
(1) "உங்களைப் பற்றி குறை கூறுபவரிடம், நீங்களும் குறை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை."
(2) "விரும்புவது போல் வாழ்வு அமையவில்லை என அனுதினமும் வாழ்வை கண்ணீரில் தொலைப்பதை விட, கிடைத்த வாழ்வில், சின்னஞ்சிறு தருணங்களையும் மகிழ்வாகக் கொண்டாடுவதே சிறந்தது."
(3) "தவறு செய்ய முயற்சிப்போரை தடுக்க தவறாதீர்கள். உங்கள் அறிவுரையை ஏற்க தவறுபவரை திருத்த முயற்சிக்காதீர்."
(4)"உதவி செய்வதற்கு முன், நீங்கள் உதவுபவர், உங்கள் உதவியை பெற தகுதியானவரா என ஆராய்ந்து கொள்வது அவசியம்."
(5) "அடுத்தவருடைய நம்பிக்கையை ஒருபோதும் உடைத்து விடாதீர்கள். ஏனெனில், ஒருமுறை உடைத்த நம்பிக்கையை, முன்பு போல் வலிமையாய் ஒருபோதும் மாற்ற இயலாது."
(6) "உங்கள் பெருமையை புகழ்ந்து பாடுபவரை விட, உங்கள் தவறை சுட்டிக்காட்டத் தயாராக இருப்பவரை நண்பராக வைத்துக் கொள்ளுங்கள்."
(7) "லட்சியத்தை அடைய வேண்டும் என சொல்வது மிகவும் எளிமை; ஆனால், நேரத்தை அலட்சியம் செய்யாமல் இருப்பவரால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும்."
(8) "வெற்றிக்கான வழியை வெளியே தேடி நேரத்தை வீணடிக்காதீர்கள். அடுத்தவரது வெற்றிப்பாதையை பின்பற்றுவதை விட, நீங்கள் செல்லும் வெற்றிப்பாதையில் பலரை பின்பற்றச் செய்யுங்கள்."
(9) "அடுத்தவரை துன்புறுத்த, அவரை அடித்து கொடுமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. துன்பம் தரும் சொற்களை அள்ளித் தெளித்தாலே போதுமானது."
(10) "உள்ளம் நொறுங்கி கவலையில் இருப்பவருக்கு உதவி புரிய வேண்டும் என நீங்கள் நினைத்தால், அவரை மேலும் சொற்களால் காயப்படுத்தாமல் இருப்பதே நல்லது."
மேலும் இதுபோன்ற சிந்தனை துளிகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Super👍
ReplyDeleteVery nice👌👌 & Wonderful👍👍 சிந்தனை துளிகள்.
ReplyDelete😇🧐👌
ReplyDelete