மனிதனை ஆளும் பணம் பற்றிய சுவாரசியமான கவிதை

இந்த நவீன வாழ்க்கை சூழலில், மனிதன் உருவாக்கிய பணமே மனிதனை அடிமையாக வைத்துள்ளது என்பதை விளக்கும் குறுங்கவிதை👇👇

பணம்

Currency notes and coins


மனங்களை  சிறை பிடிக்கும் காகிதத்தாள்,

உன்னைத் தேடி அலையுது மனம்.


நீ இல்லாமல் இயங்காது வாழ்வு,

என்று பதறுகிறது மனம்.


நீ இழுக்கும் இழுப்புக்கோ,

ஆடுகிறது மனிதக்கூட்டம்.


உன்னை பெற்றிட அப்பாவி மனிதர்கள்,

செய்கிறார்கள் ஆயிரம் குற்றங்கள்.


உன் மேல் இருக்கும் மோகத்தால்,

தன்னையும் தன் சொந்தங்களையும் மறக்கிறார்கள் பலர்.


நீயோ நாளைய செல்லாக்காசு,

ஆனால், நீ இல்லாது இன்று மனிதர்களோ செல்லாக்காசு.


(கவிதையை எழுதியவர் அனிதா)


மேலும் கவிதைகளை வாசித்து மகிழ, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். எங்கள் கவிதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள். பிடித்திருந்தால், நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்...😊

Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Followers of Our Blog