தன் வளத்தால் நலம் பயக்கும் "மரம்" பற்றிய கவிதை

'மரம் இல்லாத உலகம்' எவராலும் கற்பனையில் கூட நினைக்க முடியாத ஒன்றாகும்.
பாரபட்சம் பாராது அனைவருக்கும் தன் வளத்தால் நலம் சேர்க்கும் மரத்தின் நலனோ இன்று கேள்விக்குறி ஆகிவிட்டது. இன்றைய கவிதை, மரம் தன் வேதனையை விளக்குவதாய் அமைந்துள்ளது.

🌳மரம் பேசினால்....




 நீ வளர்வதை பார்த்து ரசித்தேன் நான், 
என்மீது ஏறும் போது தாங்கி நின்றேன்,
ஊஞ்சல்கட்டி விளையாடும் போது மகிழ்ந்து நின்றேன்,
என் கனிகளை சுவைத்த போது பூரித்து நின்றேன்,
இன்று, நீயோ வளர்ந்து என் கரங்களை கொய்தாய்;
புதுமை படைக்க என்னை வேரோடு அறுத்தாய்;
என் மூச்சை நிறுத்தி மகிழ்ந்து நிற்கிறாய்,
சுற்றத்தில் உள்ள தூயக்காற்றை அழித்து விட்டாய்;
ஆனால், உன் சந்ததியையோ மறந்துவிட்டாய்...!!

(கவிதையை எழுதியவர் அனிதா)

கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் ஷேர் செய்திடுங்கள்.
கவிதையை பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்திடுங்கள்.

Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog