தன் வளத்தால் நலம் பயக்கும் "மரம்" பற்றிய கவிதை
'மரம் இல்லாத உலகம்' எவராலும் கற்பனையில் கூட நினைக்க முடியாத ஒன்றாகும்.
பாரபட்சம் பாராது அனைவருக்கும் தன் வளத்தால் நலம் சேர்க்கும் மரத்தின் நலனோ இன்று கேள்விக்குறி ஆகிவிட்டது. இன்றைய கவிதை, மரம் தன் வேதனையை விளக்குவதாய் அமைந்துள்ளது.
பாரபட்சம் பாராது அனைவருக்கும் தன் வளத்தால் நலம் சேர்க்கும் மரத்தின் நலனோ இன்று கேள்விக்குறி ஆகிவிட்டது. இன்றைய கவிதை, மரம் தன் வேதனையை விளக்குவதாய் அமைந்துள்ளது.
🌳மரம் பேசினால்....
என்மீது ஏறும் போது தாங்கி நின்றேன்,
ஊஞ்சல்கட்டி விளையாடும் போது மகிழ்ந்து நின்றேன்,
என் கனிகளை சுவைத்த போது பூரித்து நின்றேன்,
இன்று, நீயோ வளர்ந்து என் கரங்களை கொய்தாய்;
புதுமை படைக்க என்னை வேரோடு அறுத்தாய்;
என் மூச்சை நிறுத்தி மகிழ்ந்து நிற்கிறாய்,
சுற்றத்தில் உள்ள தூயக்காற்றை அழித்து விட்டாய்;
ஆனால், உன் சந்ததியையோ மறந்துவிட்டாய்...!!
(கவிதையை எழுதியவர் அனிதா)
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் ஷேர் செய்திடுங்கள்.
கவிதையை பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்திடுங்கள்.
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.