Posts

Showing posts from June, 2021

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Image
தந்தையர் தின சிறப்பு கவிதை:- அன்பான மனதுடன் ஆதரிப்பார். ஆர்வமாக அக்கறையுடன் வழிநடத்துவார். தன்னலமற்ற தூய மனதுடன், தன் குழந்தையைப் பற்றியே சிந்தித்திடுவார். வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, கணக்குப் பார்க்காமல் செலவிடுவார். உழைப்பை எல்லாம் உவந்தே அளிப்பார். அதை ஒருபோதும் சொல்லிக்காட்ட மாட்டார். குழந்தையின் கள்ளமற்ற புன்னகையில், தன் வெற்றி உள்ளது என்பார். தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, தளர்ச்சியின்றி வழி காட்டுவார். தன்னிகரற்ற தூய நேசமுடைய பாசமான உறவு தந்தை! இறைவனின் அதிசயப் படைப்பில் அற்புத உறவு அப்பா!! (கவிதையை எழுதியவர் சுபஸ்ரீ)  கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். 

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog